Tuesday, August 31, 2010

கருப்பு !!!

எந்த பூக்களுமே ஒதுக்காத
வண்ணம் கருப்பு...
சூரியனின் தாக்கத்தை ஏற்கும்
வண்ணம் கருப்பு...
உழவனை வாழவைக்கும் கார்மேகம்
வண்ணம் கருப்பு...
உத்தமன் என சொல்லும் ராமனின்
வண்ணம் கருப்பு...
ஊரையே காப்பாற்றும்,காக்கும்
கடவுள் கருப்பு...
அதே வண்ண தோல் எனக்கு
இதனாலே உன் பெற்றோருக்கு
என்மேல் வெறுப்பு
ஆகையால் ஆனாய் நீ
எனக்கு இழப்பு


பின் குறிப்பு :

என் காதலியாய் உன்னை
முதல் முதல் சந்தித்த போது
நீ அணிந்த உடை கருப்பு...
நாம் காதலர்களாய் கடைசியாக
கண்ட போது அதே கருப்பு
ஆடையை நீ அணிந்து இருந்தது
என் வண்ணத்தின் தனி சிறப்பு...

Wednesday, August 11, 2010

காவிய கவி !!!

ஆயிரம் கவிதை எழுதினாலும்...
உனக்காக எழுந்த கவிதை...
உன்னை எண்ணி எழுதிய முதல் கவிதை...
என்னையும் புலவன் என்று புரிய வைத்தது...
வேறு யாரும் உன்னை கவி பாடவில்லை என்றாய்...
சரி தான்..
கண் முன்னே காவியமாய் நீ இருக்கும் போது...
கவி தான் வருமோ...
இல்லை கனுவுகள் தான் தோன்றுமோ???