Saturday, August 29, 2009

தீண்டாமை...


தீண்டாமை ஒரு பாவ செயல்...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...
குற்றம் செய்த நான் பாவம் சேர்த்தேன்...
ஒப்புதல் வாக்குமூலம்!!!!


தீபாராதனை எரியும் திரு கோவில்
தீயால் எரிந்தது...
தண்ணீரை நான் தீண்டவில்லை
அதை அணைக்க...


உயிரை காக்கும் மருத்துவமனை
உடைத்து சென்றன குண்டுகள்...
என் கைகள் நீளவில்லை
அதை தடுக்க....

கன்னி பெண்கள் கற்பு களவாடபட்டது
கண்முன்னே...
என் புஜங்கள் துடிக்கவில்லை
அதை நிறுத்த...

உடையும் உடைமையும் இழந்து
ஓடி வந்தான் சகோதரன்...
என் கண்கள் காணவில்லை
அவனை வரவேற்க...


சாவை சந்திக்கும் சத்தம் வந்தது...
என் செவியில் விழவில்லை
அதை கேட்க...

உண்ணாவிரதம், கடையடைப்பு,
போராட்டம் , மனித சங்கிலி,
கடிதம், பேச்சுவார்த்தை,
அறிக்கை என எல்லாம்
அரேங்கேறின...
அனைவரும் அற்புதமாய் நடித்தன...
நாடகமாய் நடந்தன...
என் நா எழவில்லை
அதை எதிர்க்க...

நான் ஒரு இந்தியன்...
மார்தட்டி கொள்ளும் மானம் உள்ள தமிழன்...

2 comments: